Monday 28 March 2011

மீண்டும் நான் என் கூட்டுக்குள்ளே

என் மனக் கல்லுடைத்தாய்
என் கூட்டுக்குள் இருந்து
என்னை வெளி இழுத்தாய்
அழகான இந்த காதலை
எனக்கு சொன்னாய்
உடன் -
அதன் வலியையும் சொன்னாய்.....

மீண்டும் நான்
என் கூட்டுக்குள்ளே..

காதலின் இனிமையையும் வலியையும் அறிந்த
முழு மனிதனாய்....

இந்த முறை தனியாய் இல்லை
உன்னையும் என்னோடு
அள்ளி வந்தேன்
நினைவிலும் நிஜத்திலும்...

என் கூடு
மிகவும் அழகானது
என் எண்ணத்தில் உருவானது
நினைப்பது நடக்கும்...

நீயும் என்னுடன்
வேறென்ன வேண்டும்
நீயும் நானும் இந்த கூட்டுக்குள்ளே

No comments:

Post a Comment