நின்று
நிதானித்து பார்க்கிறேன்
உன்னைத்தான்
என் கற்பனையையும்
உன்னோடே எடுத்துச் சென்றாயோ
எத்தனைதான் நெருங்கி வந்தாலும்
என் தோப்பில் நான் மட்டும் தனி மரமாக...
இறுதி வரை பழகிக் கொள்கிறேன்..
எங்கே நிற்கிறேன்
ஒலியும் இல்லை ஒளியும் இல்லை
மயானமா என்றால் பிணவாடையும் இல்லை...
உயிரோடுதான் இருக்கிறேன்