Thursday 18 July 2013

நீ என்னை ரசிக்கிறாய்

அடர்ந்த மழைத் துளிகளில்
ஒருவனாய் நான்

ஜன்னலுக்கு அந்தப் பக்கம்
அழகாய் நீ

நீ என்னை ரசிக்கிறாய்
மழையைத்தான்

உன்னை தீண்டிப் பார்க்க 
மூடிய ஜன்னலில்
கரைந்து வழிகிறேன் நான்...

கவிதைகள் வார்த்தைகளால் செய்யப்படுவதில்லை

மீண்டும் காதல் கவிதைகள் 
காற்றில் வருகிறது

அந்த துப்பட்டா அலையும் போதெல்லாம்
என்னை அசைய வைக்கிறது

முடியாத கூந்தலில்
சிக்கவைத்து சிரிக்கிறது

சத்தம் போடாத புன்னகையில்
என்னை சிறைபிடிக்கிறது

கவிதைகள் 
வார்த்தைகளால் செய்யப்படுவதில்லை

காட்சிகளாய்
உணர்வுகளாய்
நினைவுகளாய்
நீயும் உன் நேசமும்..