காதல்
வரும் போதெல்லாம்
என்னுள்
வந்து உட்கார்ந்துகொண்டு
இம்சிக்கும்
நீ யாரடி
என்
மோகினியா...
யாருக்கும்
தெரியா வண்ணம்
என் தோளில்
தொற்றிக் கொண்ட
இனிமையான கிராதகியடி
நீ...
எங்குமே
இல்லாத உந்தன்
அழகான
நிர்வாணம் தேடிக்கொண்டிருக்கிறேன்
அங்கே என்
காதல் எழுதப்பட்டிருக்க
நான்
படிக்க எத்தனிக்கிறேன்...
முகமில்லை
முகவரியுமில்லை
என்
உணர்வின் ஒட்டுமொத்த உருவானாய்
கள்கொண்டு
திரிகின்றேன்
பூ இங்கு
மாயமாவதென்னவோ...
என்
கனவுகளை நேசிக்க ஆரம்பித்தேன்
நீ அங்கே
அடிக்கடி விஜயம் செய்வதால்
கனவில் நீ
கொடுத்த வாக்குப்படி
இன்று
வருவாய் என விழித்திருக்கிறேன்...