Thursday 21 July 2011

யாரோ இவன்


தென்றலாய்தான் வருகிறாய்
ஏனோ
சுடவும் செய்கிறாய்..
இன்னமும்
மொட்டாகவே இருக்கின்றேன்
என் இதழகள் விரிய
காத்திருகின்றேன்
எல்லாம்
உன் ஒரு தீண்டலுக்காக...
சொல்லவில்லையே
என்று வருந்தியிருந்தேன்
புரிந்தது என்றாய்
உன் புன்னகையால்...
யாரோ இவன்
என மறுகி இருந்தேன்
எல்லாம் நான்தான் என
மனம் வருடி சொல்கிறான்...

Thursday 7 July 2011

யாராலும் முடியாது


உன்னை பறக்கவிடும்
இந்த தருணத்தில் சொல்கிறேன்
என்னை போல்
உன்னை நேசிக்க
யாராலும் முடியாது
இத்தனை ஆழமாய்
உன்னை சுவாசிக்க
யாராலும் முடியாது....
இது
நான் கொள்ளும் கர்வம்
இதை
உறக்கச் சொல்வேன்...
நீ
எனக்கு ஒரு புதிர்
இருந்தும்
உன்னை காதலிப்பேன்
எவரையும் மிஞ்சும் அளவு காதலிப்பேன்
தள்ளி நின்றே
பாசம் கொள்வேன்
யாருக்கும் மிச்சம் வைக்காமல்
வேறு யாராலும் முடியாது
இத்தனை பாசம் கொள்ள...
நான் அங்கு இருக்கிறேனா
தெரியவில்லை
நீ இங்கு
முழுதாய் நிரம்பியிருக்கின்றாய்
அள்ளி அணைத்துக்கொள்
என்று சொல்லப் போவதில்லை
அந்த மூளையில்
இருந்து கொள்கிறேன்...