Monday 4 February 2013

வரண்டு போயிருக்கும் இதழ்கள்



ஈரம் வற்றிய
என் இதழ்கள்
உன்னை அணைத்து
விழுங்விட பார்க்கின்றன
கருவளையம் சூடிய
உன் கண்கள் என்னை விழுங்கிவிட்டிருந்தன...

மறக்கவியலா நினைவுகளோடு
மீண்டும் உன் இடை வளைக்க
தழுவுகின்றன என் விரல்கள்...

மோகமும் காமமுமாய் உருக்கொண்டு
வாசமும் இதமும் வேண்டுமென
சிணுங்குகிறது என் காதல்...

உன் காதோர சூட்டிற்கும்
கழுத்து நரம்பு துடிப்பிற்கும்
முலைகளின் விம்மலுக்கும்
கனுக்காலின் மதர்ப்பிற்கும்
ஈடுகொடுக்க முடியாமல்
தவித்துத் துடிக்கின்றன
என் விரல்களும் இதழ்களும்...

தானாய் விட்டுவிட
துவண்டு கிடக்கிறது
உன்னை பற்றியிருக்கும் ஆடைகள்...

பிம்பங்கள் இவையென
ஒரு விரலால்
அழித்துவிட்டு என்னை பார்த்து சிரிக்கின்றன
என் கனவுகள்...

கொண்ட காதலோ
மோகத்தை நீட்டிக்கிறது...

ஈர முத்தம்



சற்று ஒதுக்கிவிட்டு
ஒளியை பார்க்க ஆரம்பிக்கிறேன்
மூடியிருந்த பனியும்
அழகாகவே தெரிகிறது
உன் நினைவுகள்
ஓடி வந்து ஒட்டிக்கொள்கின்றன...

விடியாத போது
எனக்கு தெரியாது என நினைத்து
நீ கொடுத்த
அந்த ஈர முத்தம்
கதகதப்பாய் என் கன்னத்தின் ஓரத்தில்
சிலிர்க்க வைக்கிறது...