என்
மென்மலர்களால் உன்னை
வருடிவிட்டுக்
கொண்டிருக்கையிலேயே
என் பாம்பு
விஷம்
உன்னை பதம்
பார்த்துக் கொண்டிருகிறது...
கட்டுக்கள்
அவிழ்த்து
பறந்து
போகையில்
என் காதல்
உனக்குள்
சிறைபட்டுக் கிடக்கின்றது...
இலை வழியே
பூத்துக்
குலுங்கிய உன் நேசம்
வேர் வழியே
உன்னை சருகாக்கி
விழுங்கி
கொடியாக செழிக்கிறது
நீ அதில்
படர்ந்துகொள்கிறாய் அழகிய பூவாக...
எட்டிப்
பிடிக்க
துள்ளிக்
குதிக்கும் கொடியிலிருந்து
தப்பிப்
பறக்கும் பட்டாம்பூச்சி எண்ணங்கள்
வண்ணப்
பூக்களின்
வாசனைத்
தேனுக்கள்
மீண்டும்
சிக்கிக்கொள்கின்றன...
என்
இதயத்தோடு சேர்ந்து
உன்
அனைத்து இதயமும்
தோரணம்
கட்டிக்கொண்டன
உன்னை
என்னுள் வரவேற்க...
அந்த
மூலையில்
நான்
எப்போதும்போல்
சோகமாக
உன்னை
பார்த்து சிரித்துக்கொண்டிருக்கிறேன்
பசியோடு...