விடை
தெரியாத குழப்பங்கள்
சூழும்போதெல்லாம்
உன் மடி
தேடி
புதைந்து
கொள்வது
வாடிக்கையாகிப்
போய்விட்ட்து எனக்கு
உன் சோர்வு
காத்திருக்கும்...
தொலந்து
விடுமோ
என தேடும் என்
புன்னகையும்
உன் விரல்
பிடித்து
பத்திரமாய்
வந்து
என் இதழ்
ஏறி மனம் புகுந்து கொள்கிறது
உன்
கண்ணீர் காத்திருக்கிறது...
எத்தனை
ஜென்மம் காத்திருந்தேன்
என
நினைவில் இல்லை
இப்படி நீ
என்னை
ஆட்கொள்ள
உன் தேடல்
நானாகிறேன்...
நீ
இருக்கிறாய்
என நான்
நம்பத் துவங்கிய பின்
நான் அழத்
தயங்கியதில்லை
ஒவ்வோரு
முறையும்
நீ
அணைத்துக் கொள்ள தவறியதில்லை
உனது
வலிகளை தாண்டி...
மனதின் வலி
பாரமாகும் போதெல்லாம்
உன் தோள்
எனக்கு
முன்னே
நான் சாய
காத்திருக்கும்
உன் த்லை
என் தலை சாயும்...
என் கண்ணீரையும்
உன்
கண்ணீர் கொண்டே துடைக்கிறாய்
இது இந்த
நேசத்தின் வரம்...
No comments:
Post a Comment