உன் கோபம்
என்னை சுட்டதில்லை
உன் காதல்
என்னை குழைத்ததில்லை
உன் மோகம்
என்னை வீழ்த்தியதில்லை
உன் மௌனம்
எனக்கு வலித்ததில்லை
உன் கண்ணீர்
இவற்றையெல்லாம் செய்த அளவு...
உன் இமை ஓரம்
துளிர்த்துவிட துடிக்கும்
அந்த ஒற்றை துளி
இதயம் வலிக்கிறது
கைகளின் நடுக்கம் என் கட்டுக்குள் இல்லை...
ஐயோ என் செய்துவிடேன்
என் உயிரை
என் கத்தியின்
கூர்மை அறிய
உன் இதயம்தானா கிடைத்தது எனக்கு...