Friday 24 June 2011

உன் கண்ணீர்

உன் கோபம்
என்னை சுட்டதில்லை
உன் காதல்
என்னை குழைத்ததில்லை
உன் மோகம்
என்னை வீழ்த்தியதில்லை
உன் மௌனம்
எனக்கு வலித்ததில்லை
உன் கண்ணீர்
இவற்றையெல்லாம் செய்த அளவு...

உன் இமை ஓரம்
துளிர்த்துவிட துடிக்கும்
அந்த ஒற்றை துளி
இதயம் வலிக்கிறது
கைகளின் நடுக்கம் என் கட்டுக்குள் இல்லை...

ஐயோ என் செய்துவிடேன்
என் உயிரை
என் கத்தியின்
கூர்மை அறிய
உன் இதயம்தானா கிடைத்தது எனக்கு...

Tuesday 21 June 2011

இந்தத் தருணம் – உண்மை


அந்தி நேரம்
தந்த மயக்கமா
உன் அருகாமை தந்த
நம்பிக்கையா
உன் விரல் கோர்த்து
என்னை படித்தேன் - உனக்காக
உன் விரிந்த தோள் சாய்ந்து
என்னை மறந்தேன்...
என்னுடன் நீ இருப்பாயா
இறுதி வரை வருவாயா
யோசனை செய்யும் நிலையில்
நானில்லை
இந்தத் தருணம் – உண்மை
நீ என்னுடன்
எனக்காய் முழுவதுமாய்...
யார் நீ –
தேவையில்லை எனக்கு
யார் நான் –
கேட்கவேயில்லை நீயும்...
நீ – எனக்கான நீ
நான் – உனக்கான நான்
எரிந்தாலும்
தொடரும் இந்த தருணம்...
இத்தனை நேரம் இலகுவாய்
இப்போது இறுகிப் போய்
உருகுவாயோ எனக்கு

Thursday 9 June 2011

உன் மௌனம்

உன்னை பார்த்திருக்க முடியுமானால்
உன் மௌனம்
அழகாய் இருந்திருக்கும்
உன் குரல் கேட்டு வாழ்வதால்
இந்த மௌனம்
என்னை கொல்கிறது...
உன் மௌனம் போலவே
உன் கோபமும்
அழகாய் இருக்கிறது
உன்னை காதலிக்க சொல்கிறது...
எங்கே இருந்தாய்
இத்தனை நாள்
இப்படி ஒட்டிக் கொண்டாய் என்னுடன்

Monday 6 June 2011

கால இயந்திரம்


உனக்கான நான்
அப்படியேதான் இருக்கிறேன்
இந்த கால இயந்திரத்தை
இங்கேயே நிறுத்தி வைக்கிறேன்
சாவி உன் கையில்.....
தோலுறித்து
புது அவதாரம் எடுக்கின்றேன்
உனக்கு வேண்டிய
உன் தோழனாய்...

அன்பும் அழகுமாய்


காதல்
இல்லை என்றாய்
இருக்கட்டும்
தோழி என்று
தழுவிக் கொண்டாயே
இது மேலும் சுகம்
மேன்மையானது...
வருத்தங்கள் ஒரு பக்கம்
இருதுவிட்டு போகட்டும்...
தோழியாகவும்
எல்லாமும் நீயேதான்
மஞ்சம் மட்டும்தானே
நான் காமத்தை துறந்தே விடுகிறேன்...
தோழமையில்
உரிமைகள் அதிகம்
உன் மனம்
எனக்கு
மேலும் விசாலமாய்...
சேராத தண்டவாளங்களாய்
எப்போதும் அருகாமையில்
தொடரும் இனிமையாய்
வேண்டும்போது
தோள் தொடும் தூரத்தில்...
அன்பும் அழகுமாய்
இருப்போம் நட்பே
இந்த உலகம்
நம்மை உதறும் வரை
இந்த நேசம் இருக்கும்
மேலும் இறுகும்....