உன்னை
ரசித்திருக்க
ரசித்துக்கொண்டேயிருக்க
தனியாய் அழகாய் வேறு
நீ இருக்கவும் வேண்டுமோ...
உன் நேசம் ஒன்றே போதும்
உன்னை
ரசித்துக் கொண்டே இருக்க...
உனது சின்ன சின்ன சேஷ்டைகள்
ஒவ்வொரு அசைவுகளும்
நீ பேசும் வார்த்தைகள்
உனது கோவமும் தாபமும்
சிரிப்பும் சினுங்கள்களும்
அத்தனையும்
அந்த அத்தனையும் செய்யும்
நீயும்
எப்போதும் அழகுதானே...
தனியாய் அழகென்று
உன்னில் எதை சொல்வேன் நான்
என் தேவதையடி செல்லமே நீ...