என் காதலியே
என்னவளே
எங்கே இருக்கின்றாய்
என்னுள்ளே
பத்திரமாகத்தானே இருக்கின்றாய்...
வாயேன்
கை கோர்த்து
ஒரு நடை போட்டுவிட்டு வருவோம்
தோள்கள் முத்தமிட்டுக்கொள்ள
காற்றுக்கு வலிக்காமல்
அதனூடே புகுந்து
மெல்ல மெல்ல
அந்த கடற்கரையோரம்
கதை பேசி
நடந்துவிட்டு வருவோம்...
மணலின் மடியில் அமர்ந்து
அலை ரசிப்போம்
அந்த அலை வழியே
நம் எண்ணங்கள்
கைகோர்த்து
சுற்றி வரட்டும்
இந்த உலகம் முழுதும்
அதுவரை
இந்த மனங்கள்
மௌனம் பேசி
மகிழ்ந்திருக்கட்டும்
என் கைகளில்
உன்னவை
அமைதியாய் பாதுகாப்பாய்
உன் தலை
என் தோளோடு
இது ஒரு மோன நிலை
வார்த்தைகள் இல்லை
உணர்கிறோம்...