Saturday 19 November 2011

எல்லாம் சரியாகிடும்


வார்த்தைகளில்
வலியை சொல்லுகிறேன்
இறக்கியும் வைக்க முடியுமா
வலியைவிட கொடுமையாய்
அதன் வார்த்தைகள்
தொண்டையில் சிக்கிக்கொண்டு
குத்துகின்றன...

உன்னை விட்டுச் செல்கிறேன்
என்று சொல்லும் வரை
உன்னை நான்
அத்தனை நேசிப்பதாய்
எனக்கே தெரியாது
உனக்கு தெரிந்திருக்குமோ...

என்னுள்ளேயே
இத்தனை வலியென்றால்
உன்னுள்ளே
கண்டிப்பாய் அழுதிருப்பாய்
உன் தலை கோதி
ஒரு முத்தமிட்டு
எல்லாம் சரியாகிடும்
கவலைப்படாதே
என்று
நம்பிக்கை வார்த்தைகளை
ஆறுதலாய் சொல்லி
தோள் தரத்தான் ஆசை...

சரியாக வேண்டியது
நான் என்பதால்
மனதுக்குள் மட்டும்
மறுகுகிறேன்...

No comments:

Post a Comment