என் காதலியே
என்னவளே
எங்கே இருக்கின்றாய்
என்னுள்ளே
பத்திரமாகத்தானே இருக்கின்றாய்...
வாயேன்
கை கோர்த்து
ஒரு நடை போட்டுவிட்டு வருவோம்
தோள்கள் முத்தமிட்டுக்கொள்ள
காற்றுக்கு வலிக்காமல்
அதனூடே புகுந்து
மெல்ல மெல்ல
அந்த கடற்கரையோரம்
கதை பேசி
நடந்துவிட்டு வருவோம்...
மணலின் மடியில் அமர்ந்து
அலை ரசிப்போம்
அந்த அலை வழியே
நம் எண்ணங்கள்
கைகோர்த்து
சுற்றி வரட்டும்
இந்த உலகம் முழுதும்
அதுவரை
இந்த மனங்கள்
மௌனம் பேசி
மகிழ்ந்திருக்கட்டும்
என் கைகளில்
உன்னவை
அமைதியாய் பாதுகாப்பாய்
உன் தலை
என் தோளோடு
இது ஒரு மோன நிலை
வார்த்தைகள் இல்லை
உணர்கிறோம்...
13 comments:
அருமை..
சூப்பர் தல:-)
@Selvakumar Sir,
நன்றி...
@Loganathan
மகிழ்ச்சி.. :)
>>இது ஒரு மோன நிலை
நித்யானந்தா ரசிகர் போல ஹே ஹே ஹேய்
@ சி.பி.செந்தில்குமார்,
தல... அதுக்கு அர்தத்தையே மாத்திடுவீங்க போல.. :)
அருமையான வரிகளில் நல்ல கவிதை
நன்றி அம்பலத்தார் அவர்களே...
கவிதை அருமை .. வாழ்த்துக்கள்
அருமை !
@அரசன்,
மகிழ்ச்சி :)
@ராணி,
மகிழ்ச்சி.. :)
நல்ல பதிவு. நன்றி!
Post a Comment