ஏன் வந்தாய்
என்னையும் கேட்கிறேன்
உன்னையும் கேட்கிறேன்
தெரியவில்லை எனறு சொல்லி
ஒரு புன்னகை பூக்கிறாய்
ஆயிரம் அர்த்தங்கள்
சொன்னாலும்
அதில் எல்லாம் இல்லாத
ஏதோ ஒன்று
மர்மமாய் – உன் புன்னகையில்...
என்னை விட்டு போவாயோ
ஒவ்வொருமுறை இதை நீ கேட்கையிலும்
உன்னை நான் அதிகம் நெருங்குகிறேன்
உன் கண்ணில் தெரியும்
அந்த பயம் போக்க
வழி அறியாமல் விழிக்கின்றேன்...
உன் முத்தங்கள்
ஒவ்வொன்றும்
இன்றும்
இனித்துக் கொண்டுதான் இருக்கின்றன
உன் அணைப்பு அனைத்தும்
என்னை அரவணைத்துக்கொண்டேதான் இருக்கின்றன...
உன்னை நீக்கி
என்னையும்
என் நினைவுகளையும்
என் நிமிடங்களையும்
தனித்தெடுக்க முடியவில்லை
நானும் முயலவில்லை
இயைந்து
கலந்து
ஒன்றாகிப் போயிருக்கிறாய்...
உன் தாபங்களும் கோபங்களும்
உன் கெஞ்சல்களும் கொஞ்சல்களும்
மாறி மாறி
உன் நேசம் சொல்லும்
அதில் உன்னோடு நானும் மூழ்கி
நெகிழ்ந்து போகின்றேன்...
எதையும் யோசிக்காதே
என்னோடு இருந்துவிடு...
6 comments:
சரி நாதன் உன்னோடு இணைந்துவிடுகிறேன்..நன்று
மதுமதி,
மகிழ்ச்சி... :)
மிக அழகான கவிதைக்கு அன்பான வாழ்த்துக்கள் ...
எதையும் யோசிக்காதே
என்னோடு இருந்துவிடு...
அருமையான வரிகள்
@அரசன்,
மகிழ்ச்சி :)
@சசிகலா
மகிழ்ச்சி :)
Post a Comment