என் விழியோரம்
உன் உருவம் நிறுத்தி
நீ வரும் வழியெங்கும்
உனக்காக காத்திருக்கிறேன்...
நீ அங்கு
இல்லையென்று அறிந்தும்
உன் வீதியில்
நான் உலவிக் கொண்டிருக்கிறேன்
உன் தரிசனம் வேண்டி...
எங்கெல்லாம் நீ நின்றாயோ
அங்கெல்லாம் பார்க்கின்றேன்
அதே புன்னகையோடு
என்னை பார்த்து சிரிக்கின்றாய்
காற்றோடு கரைந்தும் போகிறாய்...
என் இரவுகளின்
நீளங்களை
உன் வரவால் நிரப்பியவள்
நீ வரமாட்டாய்
என் தெரிந்தும்
இந்த மனம்
என்னை விழித்திருக்க சொல்கிறது
அந்த நட்சத்திரங்களிடம்
உன் நலன் விசாரித்துக் கொண்டிருக்கின்றேன்...
என் கனவுகள்
உன் நினைவுகளால்
கனத்து போகின்றன
நீ சூடும்
ஜாதி மல்லியின் வாசம் மட்டும்
எனக்கு துணையாய் இருக்கிறது...
5 comments:
கவிதையின் மணம் எங்கும் வீசுகிறது ...
வாழ்த்துக்கள்
காதல் கவிதை பாடுகிறது..வாழ்த்துகள்..
செத்தபின்புதான் தெரிந்தது..
@அரசன்,
மகிழ்ச்சி :)
@மதுமதி,
மிக்க மகிழ்ச்சி :)
@சசிகலா,
மகிழ்ச்சி :)
Post a Comment