Friday 24 June 2011

உன் கண்ணீர்

உன் கோபம்
என்னை சுட்டதில்லை
உன் காதல்
என்னை குழைத்ததில்லை
உன் மோகம்
என்னை வீழ்த்தியதில்லை
உன் மௌனம்
எனக்கு வலித்ததில்லை
உன் கண்ணீர்
இவற்றையெல்லாம் செய்த அளவு...

உன் இமை ஓரம்
துளிர்த்துவிட துடிக்கும்
அந்த ஒற்றை துளி
இதயம் வலிக்கிறது
கைகளின் நடுக்கம் என் கட்டுக்குள் இல்லை...

ஐயோ என் செய்துவிடேன்
என் உயிரை
என் கத்தியின்
கூர்மை அறிய
உன் இதயம்தானா கிடைத்தது எனக்கு...

No comments:

Post a Comment