நானான நீ
நீயான என்னை
தானாக தழுவிக் கொள்கையில்
நானான நீ
என்னுள் இல்லாமல்
காணாமல் போய் காயப்படுத்துகிறாய்...
வாழ்வின் விளிம்பில்
தொங்கிக் கொண்டிருக்கையிலும்
விடாமல் துரத்தும்
துன்பங்கள்
பாரம் தாங்காமல்
கை வலிக்கிறது என
இளைப்பாற வழி தேடுகிறது
நீயேனும் சற்று அணைத்துக்
கொள்வாயென
உன்னை பார்க்கிறேன்
நீயோ தூரத்தில் அழகாய்
சிரிக்கிறாய்
என் மடியில் ஒய்யாரமாய்
படுத்துக்கொண்டு...
உன் மேல் கோவம் வருகிறது
எரிச்சலும் துரத்துகிறது
ஆனால் இந்த காதல் மட்டும்
போக மாட்டேன் என பாடாய்
படுத்துகிறது...
எட்டிப் போன என எத்தனை முறை
தள்ளி விட்டாலும்
மீண்டும் வந்து தொற்றிக் கொள்கிறாய்
சுகமான பாரமாக...
No comments:
Post a Comment