ஈரம்
வற்றிய
என்
இதழ்கள்
உன்னை
அணைத்து
விழுங்விட
பார்க்கின்றன
கருவளையம்
சூடிய
உன் கண்கள்
என்னை விழுங்கிவிட்டிருந்தன...
மறக்கவியலா
நினைவுகளோடு
மீண்டும்
உன் இடை வளைக்க
தழுவுகின்றன
என் விரல்கள்...
மோகமும்
காமமுமாய் உருக்கொண்டு
வாசமும்
இதமும் வேண்டுமென
சிணுங்குகிறது
என் காதல்...
உன் காதோர
சூட்டிற்கும்
கழுத்து
நரம்பு துடிப்பிற்கும்
முலைகளின்
விம்மலுக்கும்
கனுக்காலின்
மதர்ப்பிற்கும்
ஈடுகொடுக்க
முடியாமல்
தவித்துத்
துடிக்கின்றன
என்
விரல்களும் இதழ்களும்...
தானாய்
விட்டுவிட
துவண்டு
கிடக்கிறது
உன்னை
பற்றியிருக்கும் ஆடைகள்...
பிம்பங்கள்
இவையென
ஒரு
விரலால்
அழித்துவிட்டு
என்னை பார்த்து சிரிக்கின்றன
என்
கனவுகள்...
கொண்ட
காதலோ
மோகத்தை
நீட்டிக்கிறது...
No comments:
Post a Comment