Thursday 18 July 2013

கவிதைகள் வார்த்தைகளால் செய்யப்படுவதில்லை

மீண்டும் காதல் கவிதைகள் 
காற்றில் வருகிறது

அந்த துப்பட்டா அலையும் போதெல்லாம்
என்னை அசைய வைக்கிறது

முடியாத கூந்தலில்
சிக்கவைத்து சிரிக்கிறது

சத்தம் போடாத புன்னகையில்
என்னை சிறைபிடிக்கிறது

கவிதைகள் 
வார்த்தைகளால் செய்யப்படுவதில்லை

காட்சிகளாய்
உணர்வுகளாய்
நினைவுகளாய்
நீயும் உன் நேசமும்..

No comments:

Post a Comment