Monday 2 May 2011

இனிய இம்சைகளும்


எனக்கு மட்டும்தான் தெரியும்
உன்னை காணாத பொழுதுகள்
எத்தனை கொடுமை என்று

அந்த வலிகூட
இனிக்கத்தான் செய்கிறது
இந்த காத்திருத்தல்
உனக்காக என்பதனால்...

கண் மூடுகிறேன்
மூடிய இமைகளுக்குள்ளே
உன் உருவம் விரிகிறது
பரந்து விரிந்து
என்னை ஆட்கொள்கிறது...

எனக்கு தெரியும்
இந்த எல்லா
இனிய இம்சைகளும்
நீ வரும் வரைதான் அன்பே...

உன் வாசம்
என்னை தீண்டும்போது
எல்லாம் இன்பமாகிவிடும்....

No comments:

Post a Comment