Thursday 3 March 2011

ஏனடி இந்த குழப்பம்

என்னை நீ எங்கே வைத்திருக்கிறாய். நானும் ஒரு குழப்பத்தின் காரணமாகிப் போனேன் என்று நினைக்கையில் சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது. உன்னுள் வேறொருவன் சற்று சங்கடமாதான் இருக்கிறது. சத்தியமாய் வருத்தமோ கோவமோ இல்லை. உன்னிடம் நான் பொய் சொல்லுவதில்லை. உனக்கென ஒருத்தன் மகிழ்ச்சியாய் இருக்கிறது. அதைவிட நிம்மதியாய் இருக்கிறது. நீ சந்தோஷமாய் இருப்பாய் என்ற நினைப்பே அதற்கு காரணம். எனக்கும் நன்றாய் தெரியும் நான் என்றும் உன்னுள் இருப்பேன் என்று. நான் என்றும் இருப்பேன். கவலை வேண்டாம். குழப்பம் வேண்டாம். உன்னை பார்த்துகொண்டே இருப்பேன். உனக்கு சிறு சோர்வென்றாலும் தாங்கிக்கொள்ள நான் இருப்பேன். நீ சொன்னதே போதும் உனது துன்பங்களை புரிந்து கொள்ள. இனி எல்லாம் இன்பமாய் இருக்க வேண்டும். ஒரு துளி கண்ணீர் துளி என்றாலும் தாங்காது நான் ஓடிந்துவிடுவேன். கண்டிப்பாய் விரைந்து இருப்பேன் உன்னை தாங்கி கண்ணீர் துடைக்க. உன்னை அணைத்து கொள்ள நீ புதைந்து கொள்ள இரு கரம் உனக்காகவே நீட்டி இருப்பேன். எல்லாம் நான் கொண்ட காதலுக்காக. நீ எனக்கு தந்த காதலுக்காக. 

உனக்குள் குழப்பத்தை எற்படுத்தினேனா அல்லது ஒரு கேள்வியை விதைத்தேனா?? இது உனக்கு நன்மை செய்யுமா அல்லது கெடுதலா?? எது நடந்தாலும் நான் நீ கேட்டது போல அங்கேயே இருப்பேனடி அன்பே. உனக்காக...முழுதும் உனக்குமாக...எல்லாமுமாக...

காதல் இத்தனை கலவரம் புரியும் என்று எனக்கு தெரியாது. இரவு பகல் கலைத்து போட்டது. துன்பம் என்பதே தெரியாமல் செய்தது.

No comments:

Post a Comment