இதுவரை இப்படி இருந்ததில்லை...
ஏனோ உன் நினைவுகள்
அலை அலையாய்
வந்து கொண்டே இருக்கின்றன...
ஏதேதோ ஏக்கம் என்னுள்ளே
அன்பே அத்தனையும் உன்னுள்ளும் இருக்குமில்லையா??
என்னை சொல்ல உன்னைத்தான் தேடுவேன்....
நீ உன்னை யாரிடம் கூறுவாய்...
ஒரு பெண்ணாய்
ஒரு சக மனிதனாய்
நீ என்னுள் உயர்ந்து நிற்கிறாய்...
இத்தனை காதல் உன்மேல்
நானே நினைக்கவில்லை...
உனக்காக உள்ளே வந்தேன்
உன் சோகம் தீர்கவே உறவு சொன்னேன்...
எல்லாமே மாறிப் போனது...
நீ வேண்டும் எனக்கு இன்று
என் சோகம் தீர்க்கவும்
நான் கொஞ்சம் சாய்ந்து கொள்ளவும்.
No comments:
Post a Comment