உன் அருகாமை
உன் காதல்
உன் நேசம்
நீ இல்லாமல் கூட நான் உணர்கிறேன்...
உன் தீண்டல்
உன் குரல்
உன் வாசம்
உன் உணர்வு
என்னிடமே இருக்கிறது ...
ஏதோ ஒரு பாதுகாப்பு
என் தாயாகிறாய் ...
ஏதோ ஒரு இன்பம்
என் காதலியாகிறாய்...
ஏதோ ஒரு அருகாமை
என் தோழியாகிறாய்...
என்ன கொடுத்தாய்
எனக்குள்....
நீ இல்லாமல் போனாலும்
உன் முத்தத்தின் ஈரம்
உன் அணைப்பின் கதகதப்பு
என்றென்றும் என்னை
உயிரோடு வைத்திருக்கும்
No comments:
Post a Comment