Tuesday, 15 March 2011

அழகாய் அமைதி கொள் அன்பே

நீதானே இது
இத்துனை உறுதி 
என் அன்பை அல்ல 
என் அரவணைப்பை அல்ல
என் உதவதியை மட்டும் 
வார்த்தையில் கூட 
வேண்டாம் என்று 
தள்ளி வைக்கும் 
அந்த உறுதி....

ஆனால் நான் இப்படித்தான் 
உறங்கும் நேரத்திலாவது 
உன் கவலைகளை 
உன் பொறுப்புகளை
என் மார்பில் 
நீ சாய்ந்திருக்கும் போது 
உன்னிடமிருந்து பிடுங்கி 
நான் சுமந்து கொள்வேன்....
நிம்மதியாய் உறங்கடி அன்பே...
நான் சந்தோஷிக்கவேனும்
அழகாய் அமைதி கொள் அன்பே...

No comments:

Post a Comment