நீதானே இது
இத்துனை உறுதி
என் அன்பை அல்ல
என் அரவணைப்பை அல்ல
என் உதவதியை மட்டும்
வார்த்தையில் கூட
வேண்டாம் என்று
தள்ளி வைக்கும்
அந்த உறுதி....
ஆனால் நான் இப்படித்தான்
உறங்கும் நேரத்திலாவது
உன் கவலைகளை
உன் பொறுப்புகளை
என் மார்பில்
நீ சாய்ந்திருக்கும் போது
உன்னிடமிருந்து பிடுங்கி
நான் சுமந்து கொள்வேன்....
நிம்மதியாய் உறங்கடி அன்பே...
நான் சந்தோஷிக்கவேனும்
அழகாய் அமைதி கொள் அன்பே...
No comments:
Post a Comment