போய் வரட்டுமா...
என்று நீ சொல்லும் போதெல்லாம்
என் மனம் வலிக்கிறது
என்னோடு நீ இருக்கும் தருணங்கள்
எனக்கு சந்தோஷ நிமிடங்கள்
நீ என்னோடுதான் இருக்கின்றாய்
இது எனக்கும் தெரியும்
இருந்தும் அந்த சிறு பிரிவுகள்
எனக்கு நீ அதை சொல்லும் போதே
என் மனதில் ஒரு வலி...
இதயம் கனத்துவிடுகிறது
என் செய்வேன்
என் இனிய காதலியே...
ஒரு முத்தத்தால் மருந்திடுகின்றாய்
ஆனால்
நீ இல்லாத தருணங்களில்
மீண்டும் வலிக்கிறதே...
என் செய்வேன்
என் இனிய காதலியே...
No comments:
Post a Comment