Monday 14 March 2011

என்னிடம் சொல்லிவிடு

சோகம் ஏனடி அன்பே 
மனதில் கொள்ளாதே 
என்னிடம் சொல்லிவிடு...

உனக்காக மட்டும் தானடி இங்கே நான்
உன் மனதின் வாசலிலேயே காத்திருக்கிறேன்
சோர்வு உன்னை தீண்டும் போது எல்லாம் 
உன்னை தாங்கிக் கொள்ள 
கவலை கொள்ளாதே 
உனக்காகவே 
நீ விரும்பும் வடிவில் -
நட்பாய், காதலாய், தந்தையாய், தாயாய், சகோதரனாய், பிள்ளையாய், 
உன்னோடு உனக்காகவே இருப்பேன்....
நீ சொல்ல வேண்டாம் 
உன்னை எனக்கு தெரியும் 

நீ அழுதால் 
நான் தடுக்கப் போவதில்லை 
உன் மனதின் பாரம் குறையும் வரை அழுதுவிடு...
நீ முகம் புதைத்து அழ 
மடி கொடுத்து 
உன் தாயாக உன் தலை கோத
உனக்காக நான்.....

No comments:

Post a Comment