Saturday 19 March 2011

என் மேல் என்னதான் கோவமோ

இந்த இரவுக்கு 
என் மேல் என்னதான் கோவமோ
உன் பிரிவின் நினைவுகளை 
மீண்டும் மீண்டும் 
என் மீது மோதவிட்டு 
என்னை இம்சிக்கிறது....
இதை பார்த்து 
கண்சிமிட்டி சிரிக்கின்றன
வானத்து நட்சத்திரங்கள்...
தென்றலுக்கு மட்டும்தான்
என் மீது கொஞ்சம் கரிசனம் 
இதமாய் வீசுகையில் 
உன் காதலின் சுகந்தத்தை சொல்லி 
நீயாய் அணைத்துக்கொள்கிறது....

No comments:

Post a Comment