Thursday 3 March 2011

நான் உன்னோடு இருக்கிறேனா

நான் உன்னோடு இருக்கிறேனா. உனக்கு நான் தேவையானபோது உனக்கு தேவையான வடிவில் நான் உன் அருகில் இருக்கிறேனா? உண்மையில் எப்போதும் உன் அருகில் இருக்கவே விரும்புகிறேன். இது முடியாத போது உன் நினைவிலேனும் உனக்காக உன் அருகில்...உன் கை கோர்த்து இருக்க விரும்புகிறேன்....நீ தலை சாய்க்க...நீ முத்தம் மிட....நீ அயர்ந்து தூங்க என் மார்பு விரித்து....நீ அமைதி கொள்ள உன் தலை கோதி முதுகு வருடிவிட....இதுவரை நான் காதல் உணர்த்து இல்லை. இந்த காதல் என்னையும் பைத்தியமாக்கியது. கற்பனைகள் கட்டவிழ்ந்து ஓடியது. காலங்கள் கடந்து உன்னையும் என்னையும் கண் முன் எனக்கு படம் பிடித்து காட்டியது. 


இந்த நமது உறவில் பிரிவும் வருமோ. வந்தால் என்ன ஆகும் என்று கூட நினைக்க தோன்றவில்லை...பிரிவே வராது என்று என் மனம் சொல்கிறது. 

நான் உன்னை நெருங்கி வருகிறேன்..உனது இதயம் எனதை மிகவும் நெருங்கி விட்டது...எனக்கு இரன்டுக்கும் வித்தியாசமே தெரியவில்லை....

No comments:

Post a Comment