Monday 28 February 2011

உன்னை தாண்டி செல்ல

இது முடியுமா 
உன்னை தாண்டி செல்ல 
என்னால் முடியுமா.....
உன் நினைவுகளை தாண்டி 
என் இதயத்தை அமைதியாக்கி 
உலக இயக்குத்துகுள் சகஜமாக வலம் வர முடியுமா...
எனது எல்லாமுமாய் 
எனது இன்பமாய் இருக்கின்றாய்....
வயிறு பசிக்கிறது...
மூளை சிரிக்கிறது...
கவலை இல்லை
உன் நினைவுகளின் இன்பத்தோடு இயங்கப் பார்கின்றேன்...
இது எனக்கு வரமாக....
என்றும் இன்பமாகவே இருந்து விட்டு போகிறேன்...
உன் நினைவுகளோடு...

நீதான் நான்
நீதான் எனது அன்பு..
நீதான் எனது இயக்கம்...
நீதான் எனது வேகம்...
நீதான் எனது இன்பம்....
நமது உலக வாழ்க்கையையும் 
உனது காதலின் அன்பு வடிவமைக்கும்...
இத்தனை தந்த அன்பு இதையும் தரும்...

இன்னும் அதிகமாய்
உன் மேல் அன்பு செய்கிறேன்...
உன்னுள் இருந்து
உன்னை மேலும் முழுதாய் புரிந்து 
நிறையவே காதலிப்பேன்...

என் அன்பே 
எனது வாழ்வின் ஒருத்தி நீ...
எல்லாமும் நீதான்...
முழுவதுமாய் காதல் செய்கிறாய்...
என்றும் எனக்காய்....

1 comment:

Thenammai Lakshmanan said...

இன்னும் அதிகமாய்
உன் மேல் அன்பு செய்கிறேன்...
உன்னுள் இருந்து
உன்னை மேலும் முழுதாய் புரிந்து
நிறையவே காதலிப்பேன்...


என் அன்பே
எனது வாழ்வின் ஒருத்தி நீ...
எல்லாமும் நீதான்...


// மிக அருமை ..உணர்ந்தவைகளை அப்படியே எழுத்தில் கொண்டு வந்திருக்கிறீர்கள்.. செந்தில்..தொடருங்கள்.. இன்னும் செம்மைப்படும்..

Post a Comment