Monday 28 February 2011

காதலின் காமம்

என்னவெல்லாம் செய்கிறது உன்னோடு நான் கொண்ட காதல்....
மோகம் சொல்லி கொடுக்கிறது...
அந்த மோகத்தில் வந்த காமம் உன்னை முழுதாய் கேட்கிறது.....
ஏதோதோ செய்கிறாய்.....
எங்கெங்கோ தொடுகிறாய்
என் மயிர் கால்கள்கூட உன்னை எட்டி பார்கின்றன
மொத்தமாய் உன்னிடம் என்னை தொலைத்தேன்
தொலைத்த என்னை உன்னுள் தேடுகிறேன்....
உன்னை தீண்டச் சொல்லி விரல் நுனிகள் கெஞ்சுகின்றன
என் இதழ்களோ...
உன்னை முத்தமிட துடிக்கின்றன
உன் இதழ் ருசிக்க
உன் காது மடல்களில் காதல் பேச
உன் கழுத்து நரம்புகளில் கவிதை படிக்க
ஆசை கொள்கிறது....
இடையூடே இறுக்கி அனைத்து...
இல்லாத இடைவெளியை வெளியேற்றி
இந்த காதல் காமம் கொள்ள சொல்கிறது....

No comments:

Post a Comment