Sunday 20 February 2011

யாரடி நீ எனக்கு...


இந்த உணர்வு எனக்கு புதிது
இனிதாய் இருந்தாலும்
நிறைய குழப்பம் தருகிறது....

நட்பு என்று சொல்லி நிறுத்தி கொள்ள முடியவில்லை....
காதல் என்று வரையறுத்து
கட்டுக்குள் வரவும் தைரியம் இல்லை...

நீ இல்லாமல் இனி என் வாழ்வு இல்லை
இந்த உணர்வுக்கும்
உறவுக்கும்...
என்ன பேர் இருந்தால் என்ன....
நீ என்னோடு வேண்டும்...

உனக்கு பிடித்தது எல்லாம் எனக்கும் பிடிக்கும்....
நீ வேண்டுவது எல்லாம் நான் செய்வேன்....

உன் குரல் கேட்கா நாட்கள் இல்லாமல் இருக்க வேண்டும்
உன்னை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்....

என் தலை சாய்த்துக் கொள்ள உன் தோள் வேண்டும்....
நீ தலை சாய்த்துக் கொள்ள என் தோள் என்றும் தயாராய் இருக்கும்....

2 comments:

x said...

nice:))

x said...

pls remove word verifacation..and change font style ..cant read properly in linux machine

Post a Comment