Friday 18 February 2011

என்ன செய்தாய் என்னை....

நீ கொடுத்த இந்த உணர்வு 
நான் இருக்கும் வரை என்னோடு இருக்கும்....
இந்த ஒன்று...
இதுவரை நான் உணர்ந்திடாத ஒன்று
உன்னிடம் மட்டுமே உணர்ந்த அன்பு...

இது சுகமா வலியா...
எனக்கு தெரியவில்லை.....
ஆனால் பிடித்திருக்கிறது....

எதுவும் நிலையில்லை என்று என் மூளை சொல்கிறது...
நீயும்.....
உன் மேல் நான் கொண்ட காதலும்...
என் வாழ்நாள் முழுதும் நிலைக்க வேண்டி 
என் மனம் வேண்டுகிறது....

இது என் வழக்கம்...
என் வழி வரும் அன்பை...
பட்டாம்பூச்சியாய் பறக்க விட்டு...
திரும்பி வருவதை கெட்டியாக பிடித்து கொள்வேன்
எனக்கே எனக்கு என்று இருந்தால்.....
என்னிடம் வந்து சேரும்....
வந்து சேர்த்தவை இன்றும் என்னுடம்...
உன்னையும் பறக்க விட்டிருக்கிறேன்...
நீ என்னோடு என்பது தெரிந்தும்....

நீ யாராய் இருந்தாலும்...
என்னவாக இருந்தாலும்...
எப்படி இருந்தாலும்...
நான் உன்னை காதலிக்கிறேன்...காதலிப்பேன்.....
முழு முதலாய் காதலிப்பேன்....
உன்னை நீயாகத்தான் காதலிக்கிறேன்....

உனக்காக என்றும் நான் இருப்பேன்...
யாரும் இல்லை என்ற உணர்வு வேண்டாம்
சாய்ந்து கொள்ள தோள் கிடைக்காத போது....
நீ நீயாக இருக்க விரும்பும் போது....
உனது கோபத்தை கொட்டி தீர்க்க....
உனது சோகத்தை சொல்லி அழ...
உனது சந்தோசத்தை கூடி கொண்டாட...
உனது மோகத்தையும் காமத்தையும் கட்டி அணைக்க...
உனக்காகவே நான் இருக்கிறேன் காதலே....

உன்னவன் நான்...
உனது பொறுப்புகளின் சுமையை என்னிடம் விட்டுவிடு...
எல்லாம் உன்னை கை விட்டாலும்...
நான் இருக்கிறேன் அன்பே....
கடைசிவரை உன்னுடன் நானிருப்பேன்....

உனக்காக நானிருப்பேன் அன்பே
என் காதலியே...
உனதானேன்....நீயானேன்.....

No comments:

Post a Comment