Wednesday 16 February 2011

மீண்டும் காதலும் கலையும்

இப்போதெல்லாம் நிறைய படிக்கிறேன்
நிறைய கவனிக்கிறேன்
வெகு நாட்களாகி விட்டது
நான் தமிழ் எழுதி
அதைவிட
வெகு நாட்கள் ஆகி விட்டது
காதல் உணர்வு கொண்டு...

காதல் வந்தது
உடன் தமிழும் எழுத சொன்னது
அழகாய்
ருத்ரம் எழுதிக் கொண்டிருந்தவன்தான்
அன்பாய்
காதல் சொல்லிக் கொண்டிருந்தவன்தான்...

வாழ்க்கை புரட்டி போடும் போது
எல்லாம் கலைந்து போகிறது
இந்த காசு படுத்தும் பாடு
காதலை மட்டும் அல்ல
கலையையும் காணாமல் செய்கிறது....

எங்கே தொலைத்தேன் என்னை
வெகு நாட்கள்
இரவின் இருட்டில் தேடியது உண்டு
களைத்துப் போன தருணங்கள்
நிறைய உண்டு
சலித்துப் போய்
இவ்வளவுதான் என்று
என்னை நிலைத்திருந்த போது....

எங்கிருந்தோ வந்து
என்னை கலைத்துப் போட்டாய்
உடன்
என்னுள் இருந்த கலையும்
உயிர்த்துக் கொண்டது...

நீ
என்னுள் வந்து அமர்ந்ததாலோ
அல்லது
பரிணாம வளர்சியாலோ
முன்னரெல்லாம்
எண்ணங்கள் சீராய் வந்தபோது
எழுத்துக்கள் பிடிபடாமல் இருக்கும்
பின்னர் வார்த்தைகள் வசப்பட்ட போது
எண்ணங்கள் சீரியதாய் இருந்தது இல்லை
இப்போது எண்ணமும் வார்த்தைகளும்
இயைந்து வருகின்றன....

No comments:

Post a Comment