Thursday 17 February 2011

காதலின் வலி

காதல் சுகமாய் இருந்தது....எளிதாக தெரிந்தது....நீ அன்று விடை பெற்று செல்லும் வரை....அந்த பிரிவு கொடுத்த வலி மிகக் கொடுமை....இத்தனைக்கும் நீ உணர்வில் என்னோடுதான் இருந்தாய்...இரண்டு நாள் நரக வேதனை....உன்னை பார்த்து விட வேண்டும் என்று இருந்தேன்.... முடியவில்லை....பேச எத்தனித்து தொலைபேசி அழைப்புக்கும் பதில் இல்லை.....இது வரை நான் அனுபவித்தது இல்லை....என்ன வேலையோ உனக்கு....பதில் ஏதும் இல்லை எனக்கு....வினாடிகளில் பதில் வரும் குறுஞ் செய்திகளுக்கும் பதில் ஏதும் இல்லை...என் மனம் இப்படி கலக்கமுற்றது இல்லை....கலங்கி நின்றதும் இல்லை....என்னை குலைத்து போட்ட எனது வாழ்வின் அந்த சம்மட்டி அடியின் போது கூட நான் தெளிவாய் இருந்தேன்....நான் என்ன செய்கிறேன் என்பது எனக்கு தெரிந்து செய்தேன்...ஆனால் இன்றோ உட்கார்ந்தது உட்கார்ந்தபடி....ஏது செய்கிறேன் என்பது தெரியாமல்...

 

எனக்கு நானே பதில் தெரியாத கேள்விகளை கேட்டு கொண்டேன்...இந்த மாற்றம் என்னை கொஞ்சம் மிரட்டி பார்த்தது....உன்னோடு நான் கொண்ட காதலின் வயது என்ன.... இந்த காதலின் ஆழம் என்ன... இந்த காதலுக்கான எனது பொறுமையின் எல்லை என்ன... நீ உண்மையிலேயே என்னோடுதான் இருக்கிறாயா.... எல்லைகளை கடந்து நான் உனக்கு தொந்தரவு ஆகிறேனா...இன்னும் எத்தனை எத்தனை கேள்விகள் என்னுள்ளே....நானே எனக்கு இனிமையான பதில்களை சொல்லி தேற்றிக் கொண்டேன்...நீ இல்லாத போது.... நான் இது வரை இப்படி ஒரு உணர்வை அறிந்ததில்லை....இந்த உணர்வு கண்டிப்பாய் உண்மை....காமம் மட்டும் என்றால் எனது மனதிற்கு  வலி தெரிந்திருக்காது.... உனது கண்களில் உன்னோடு இருந்த காலங்களில் உண்மையான அன்பை பார்த்தேன்.....என் தோள் தேடும் அந்த ஏக்கம் உணர்ந்தேன்...அதில் உண்மை மட்டுமே இருந்தது.....இப்படிதான் என்னை தேற்றிக் கொண்டேன்...

 
காதல் இப்படி எல்லாம் வலி கொடுக்கும் என்பது இன்றுதான் தெரிந்து கொண்டேன்...எனது பள்ளி இறுதி ஆண்டில் நுழைவுத் தேர்வு வகுப்பின் கடைசி நாள் வகுப்பு முடிந்து வெளி வந்த போது ...அந்த வகுப்பில் இருந்த ஒரு தேவதையின் பிரிவை நினைத்து ஏற்பட்ட வலி ஏனோ தெரியவில்லை நினைவில் வந்து போனது.....அன்று அந்த வலி தந்த வேதனை என்னை காதலின் பக்கம் எட்டி பார்க்காமல் வைத்தது...ஆனால் இன்று முழுதாய் மூழ்கி நிற்கிறேன்.....


அத்தனையும் காணாமல் போனது உன் குரல் கேட்ட வினாடி...எனது குழப்பங்கள் அர்த்தமற்றதாகி போனது....நெஞ்சில் இருந்த வலி சுகமே மாறி பட்டாம்பூச்சி படபடத்தது.....ஏதும் இல்லாதவன்....எல்லாம் கொண்டவனானேன்....பேசினோம் பேசினோம் ஏதும் இல்லாமல் பேசிகொண்டே இருந்தோம்...குழப்பத்தில் காலை சாப்பிடவே இல்லை...உன் பேச்சு கொடுத்த மகிழ்ச்சியில்....மதியமும் பசிக்கவில்லை....இதுதான் காதலா...தெரியவில்லை... அனுபவிக்க மட்டும் செய்கிறேன்..

No comments:

Post a Comment