Friday 18 February 2011

காதல் செய்த கோலம்

என்னவெல்லாம் செய்தது இந்த காதல்...நீ என்னை புரட்டி போட்டாய்....நிறைய அமைதி தந்தாய்

என்னை எனக்கே பிடிக்க வைத்தாய்...என்னை சுற்றி எல்லாம் அழகாய் தெரிந்தது...வாழ்க்கை இனிக்க துவங்கியது.....எல்லோருக்கும் என்னை பிடித்தது....எந்தன் சிரிப்பில் உயிர் கலந்தது....அது அடுத்தவரையும் தொற்றிக் கொண்டது....

நடக்கின்றேன்.... நிற்கின்றேன்....ஏதும் செய்யாமல் உட்கார்திருக்கின்றேன்.... எல்லாம் சுகமே....

பகிர்ந்து கொள்ள ஏதுமில்லையா...எத்தனை முறை கேட்டிருப்பார் என்னை சேர்ந்தவர்....அன்பிருந்தால்....காதலின் பித்திருந்தால் எல்லாம் சொல்லத் தோன்றும் போல்....நடந்து செல்லும் பொது பார்த்த அந்த குழந்தையின் சிரிப்பை உன்னிடம் சொல்லி உன் சிரிப்பை ரசிக்க ஆசை பட்டேன்...

No comments:

Post a Comment