Thursday 17 February 2011

ஒரு ஆணின் காதல்

எத்தனையோ எண்ணங்கள்.....நீ என்னை முத்தமிட்ட தருணத்தை இருத்தி வைக்க முடியுமா???உன்னை அருகில் அமர்த்தி இருளில் நான் என்ன செய்து கொண்டிருந்தேன்....வந்து போவோர் எல்லாம் நம்மை பார்த்து செல்ல நானோ அந்த இருளின் முடிவில் என்னை தேடிக் கொண்டிருந்தேன்....பல பல குழப்பங்கள்....உன் கண் பார்த்தே கொடுத்திருக்க வேண்டிய முத்தம் அது....நீ கேட்டும் அந்த பரவச படபடப்பு என்னை தடுமாற வைத்தது....ஒரு முத்தத்தைகூட........உன் கை கோர்த்து இடை சேர்த்து அந்த அலைகளின் ஓரத்தில் அளவளாவி இருக்கலாம்....எண்ணங்கள் ஓடினாலும் நான் ஏன் அப்படி அமர்ந்திருந்தேன்...உன் முகம் பார்த்து என்னை மறந்திருந்தேன்....நீ உன்னை சொல்லிய போது...உனது வாழ்கையின் இருளை என் முன் விவரித்த போது உன் மேல் நான் கொண்ட காதலில் மரியாதையும் கலந்து கொண்டது....எந்தத் தருணத்திலும் கட்டுப்பாடு இழந்து விடக்கூடாது என்பது ஓடிக்கொண்டே இருந்தது.....

திரும்பி நடக்கையில்தான் எதனை போராட்டம் என்னுள்...உன் கை கோர்த்து நடப்பதா...இடையை இழுத்து அனைத்து நடப்பதா...பைத்தியமாகவே ஆகிப் போனேன்...ஏனோ தெரியவில்ல...என்னை விட்டு இரண்டு அடி தள்ளியே நடந்து வந்தாய்...நான் அருகில் வந்தாலும் நீ தள்ளி போவதாய் எனக்கு தோன்றும்....இது மாயையா இல்லை நீ செய்த மாயமா??? நீ மட்டுமே அறிந்த ரகசியம்...எங்கே நான் உடைந்து விடுவேனோ....என்னை இழந்து விடுவேனோ....இந்த பயம் உன்னோடு வர விடாமல் என்னை தடுத்து விட்டது....


இவையெல்லாம் புதிதாய் உணர்கிறேன்.....நீ போனதும் அந்த வெறுமை....காதல் செய்த மோகம் என்னை கொல்ல துவங்கியது.....எனக்கு நானே அந்நியமாகிப் போனது இதுவே முதல் முறை...குழப்பங்கள் அத்துணை தீர்மானமாய் ஆட்சி செய்தது....காதல் செய்த குழப்பம் எல்லா வேலைகளையும் தள்ளி வைக்க செய்தது....மூளை வேலை செய்ய மறுத்தது....கையும் காலும்...ஏன் முழு உடலும் மூளையின் கட்டுப்பாட்டில் இல்லை....மனமோ உன்னில் மூழ்கி உன்னை மட்டுமே நினைத்திருந்தது....என்னென்னவோ ஆகி போனேன்....அன்றைய இரவு உன் நினைவோடு ஒரு புது அனுபவம்.....சுகமாய்....நீ என்னவள் என்ற நினைவோடு.....

காதல் தந்த காமம் இனிமைதான்....காமம் தாண்டி ஒரு சுகம் உண்டென்று அன்று தெரிந்து கொண்டேன்....உன்னை முழுவதுமாய் தின்றுவிடதான் துடித்தேன்.....

No comments:

Post a Comment