Friday, 25 March 2011

வெள்ளை பட்டாம்பூச்சி

அந்த வெள்ளை பட்டாம்பூச்சி
தனியாய்
இத்துனை கூட்டத்தினூடே 
அழகாய் பறக்கிறதே.... 
ஒவ்வொரு தோளாய் உடகார்ந்து 
சோர்வை கழிக்கிறதே...
தனது வனம் எங்கென்று 
என் கன்னம்  தீண்டி கேட்கிறதே.... 
அழைத்துச் செல்கிறேன்
வா வென்றால் 
இந்த சிறையே போதுமென்று 
என் கைக்குள் வர மறுக்கின்றதே

No comments:

Post a Comment