Thursday 14 April 2011

காத்திருத்தலின் முடிவில்

யாரும் இல்லா 
இருட்டு வனாந்திரம் 
சுற்றிலும்
ஒரு மயான அமைதி 
உனக்காக நான் மட்டும் தனியாய்...

உனக்காக காத்திருக்கும் 
யுகங்களாகும் நிமிடங்களில் 
இந்த தனிமை 
மிரள வைக்கிறது....

இனிமையான 
உன் நினைவுகள்தான் 
கை கோர்த்து 
கதை பேசி 
துணை நிற்கின்றன....

காத்திருத்தலின் முடிவில் 
அதோ நீ வருகின்றாய் 
அழகு பிம்பமாய் 
தூசி தட்டி எழுகின்றேன் 
அந்த காற்று 
உன்னை கடத்திக் 
கொண்டு போனதே...

மீண்டும் 
அதே வெறுமையில் 
காத்திருக்கிறேன்
அதீத காதலோடு
அதீத நம்பிக்கையோடு....

No comments:

Post a Comment