எப்படிச் செய்தேன் இதை
குத்திக் கிழித்து
மூச்சை முட்ட வைத்து
நானா இது
உன் ஒரு சொட்டு
கண்ணீருக்கே
உயிர் விட்டுவிடுவேன்
உன் இதயத்தில்
உதிரம் வரவழைத்தேன்
நானா இது
உனக்காகவே நான் இருந்தேன்
என்னுள் உன்னை வைத்திருந்தேன்
எப்படி நான்
உன்னை காயப் படுத்தினேன்
நானா இது
என்னை மன்னிப்பாயா
என் காதலே
இதெல்லாம் நான் செய்ய
நினைக்கவுமில்லை
ஆனால் செய்துவிட்டேன்
எங்கே இடறிப் போனேன்
புரியவில்லை
கொஞ்சம் தள்ளி வந்து பார்க்கையில்
அருவருப்பாய்
ஆனாலும் தெளிவாய் தெரிந்தது
என்னை மன்னிப்பாயா....
No comments:
Post a Comment