Wednesday 6 April 2011

நானா இது

எப்படிச் செய்தேன் இதை
குத்திக் கிழித்து 
மூச்சை முட்ட வைத்து 
நானா இது 

உன் ஒரு சொட்டு 
கண்ணீருக்கே 
உயிர் விட்டுவிடுவேன்
உன் இதயத்தில் 
உதிரம் வரவழைத்தேன் 
நானா இது 

உனக்காகவே நான் இருந்தேன்
என்னுள் உன்னை வைத்திருந்தேன் 
எப்படி நான்
உன்னை காயப் படுத்தினேன் 
நானா இது 

என்னை மன்னிப்பாயா
என் காதலே 
இதெல்லாம் நான் செய்ய 
நினைக்கவுமில்லை 
ஆனால் செய்துவிட்டேன் 
எங்கே இடறிப் போனேன் 
புரியவில்லை 
கொஞ்சம் தள்ளி வந்து பார்க்கையில் 
அருவருப்பாய்
ஆனாலும் தெளிவாய் தெரிந்தது 
என்னை மன்னிப்பாயா....

No comments:

Post a Comment