Wednesday 20 April 2011

மொத்தத்தில் முழுவதுமாய்

உன் தீண்டலில் 
என்னை மறக்கிறேன் 
உன் முத்தத்தில் 
என்னை இழக்கிறேன் 
உன் தழுவலில்
காற்றோடு கரைந்து போகிறேன் 

என் விரல் நுனி 
உன் மேனி எங்கும் கோலம் போடும் 
அத்தனை மயிர் கால்களுக்கும்
இன்பச் 
சேதி சொல்லும் 

என்னை உன்னுள் இழுத்து 
உன்னை என்னுள் இழக்கும் 
விநோதமிது 

உன் இடை தழுவி 
உன் கண் பார்கிறேன் 
அந்த மோகம் 
என்னை விழுங்கியது 
அந்த தாகம் 
என்னை கொன்றே போட்டது 

என் கைகள்
உன் வளைவுகளின் 
மறைவுகளில்
சுகங்களின் 
ரகசியங்களை தேடும் 
தேடி
அவைகளை மலரச் செய்யும் 

உன் கோவை இதழ்களின் மென்மையையும்
உன் காது மடல்களின் தன்மையையும் 
நான் வருடி அறியும் வேளையில் 
மோகத்தில் மௌனிக்கும் கண்களும் 
காமத்தில் இறுகும் கைகளும் 
தாகத்தில் துவளும் இடையும்...

இல்லாத உடை விளக்கி 
சொல்லாத அழகு பார்த்து 
கொள்ளாத இன்பம் கொண்டேன் 
அன்பே 
நீதான் 
அழகின் மூலமோ 

உன் இடை இழுத்து
காற்றுக்கும் இடம் விடாமல்  
இறுக்கி அணைக்க 
உன் பெண்மையின் மென்மைகள்
காமக் களியாட்டம் 
அழுந்தச் சொல்ல....

வார்த்தைகள் தொண்டையில்
சிக்கிக் கொள்ள 
மௌன மொழி
நியதியாக 
பிதற்றல்கள் அதிகமாக 
கட்டி அணைத்த கைகள் 
நடுக்கம் கொள்ள 
மொத்தத்தில் 
முத்தத்தில் முழுதாய் 
தொலைத்து - 
இதழ்கள் உறவு கொள்ள
உடல்கள் சங்கமிக்க 
இன்பத்தின்  விளிம்பில் நாம்.....

1 comment:

Ranioye said...

இரவின் மடியில்...
குழந்தைகளாய் நாம்..
ஆடைகளுக்கு விடை கொடுத்து
வெக்கத்தை உடுத்தி கொண்டோம்!!

Post a Comment