உன் தீண்டலில்
என்னை மறக்கிறேன்
உன் முத்தத்தில்
என்னை இழக்கிறேன்
உன் தழுவலில்
காற்றோடு கரைந்து போகிறேன்
என் விரல் நுனி
உன் மேனி எங்கும் கோலம் போடும்
அத்தனை மயிர் கால்களுக்கும்
இன்பச்
சேதி சொல்லும்
என்னை உன்னுள் இழுத்து
உன்னை என்னுள் இழக்கும்
விநோதமிது
உன் கண் பார்கிறேன்
அந்த மோகம்
என்னை விழுங்கியது
அந்த தாகம்
என்னை கொன்றே போட்டது
என் கைகள்
உன் வளைவுகளின்
மறைவுகளில்
சுகங்களின்
ரகசியங்களை தேடும்
தேடி
அவைகளை மலரச் செய்யும்
உன் கோவை இதழ்களின் மென்மையையும்
உன் காது மடல்களின் தன்மையையும்
நான் வருடி அறியும் வேளையில்
மோகத்தில் மௌனிக்கும் கண்களும்
காமத்தில் இறுகும் கைகளும்
தாகத்தில் துவளும் இடையும்...
இல்லாத உடை விளக்கி
சொல்லாத அழகு பார்த்து
கொள்ளாத இன்பம் கொண்டேன்
அன்பே
நீதான்
அழகின் மூலமோ
உன் இடை இழுத்து
காற்றுக்கும் இடம் விடாமல்
இறுக்கி அணைக்க
உன் பெண்மையின் மென்மைகள்
காமக் களியாட்டம்
அழுந்தச் சொல்ல....
வார்த்தைகள் தொண்டையில்
சிக்கிக் கொள்ள
மௌன மொழி
நியதியாக
பிதற்றல்கள் அதிகமாக
கட்டி அணைத்த கைகள்
நடுக்கம் கொள்ள
மொத்தத்தில்
முத்தத்தில் முழுதாய்
தொலைத்து -
இதழ்கள் உறவு கொள்ள
உடல்கள் சங்கமிக்க
இன்பத்தின் விளிம்பில் நாம்.....
1 comment:
இரவின் மடியில்...
குழந்தைகளாய் நாம்..
ஆடைகளுக்கு விடை கொடுத்து
வெக்கத்தை உடுத்தி கொண்டோம்!!
Post a Comment