Tuesday 5 April 2011

ரெட்டை ஜடை வயசு

ரெட்டை ஜடை வயசு 
பட்டாம்பூச்சியாய் சிறகடித்து 
கை கோர்த்து 
உலா வந்த காலங்கள் ...

ஆற்றில் 
ஓடுகிற தண்ணீருக்குள் 
ஒன்றாய்
கூடு கட்டிய 
சந்தோஷங்கள்....

நீ விட்டுச் செல்லும் 
வாசத்தை 
காற்றிடம் கேட்டு வாங்கி 
என்னுள் இருத்திக் கொள்வேன் 
இரவில்
நான் கற்பனை கொள்ள...

கோவில் சுவற்றில்
காதல் ரேகை பதித்தோம்
அந்த
காதல் பட்டாம்பூச்சி
இருவர் உள்ளத்திலும்

No comments:

Post a Comment