Wednesday 6 April 2011

ஒரு தாஜ்மகால்

உன்னை 
முதன் முதல் 
உணர்ந்த அந்த இடம் 
எனக்கு அது எப்போதும்
ஒரு தாஜ்மகால்...

ஒரு கணம் 
உன்னை கடந்து சென்ற
அந்த ஒரு கணம்
உன்னை முழுதாய் உணர்ந்தேன் 

நீ எனக்கு 
புதிதாகவே தெரியவில்லை 
கோடானு கோடி வருடங்கள் 
ஒன்றாய் இருந்த உணர்வு...

முதல் சந்திப்பில்
என் அன்பை சொல்ல 
கட்டி அணைப்பதா 
கை கோர்த்து கொள்வதா 
உச்சி முகர்ந்து 
முன் நெற்றியில் முத்தமிடுவதா...

ஏதும் செய்யாமல் 
அமைதியாய் ரசித்தேன்
உன் 
வெள்ளை சிரிப்பையும்
பட்டாம்பூச்சி கண்களையும்

No comments:

Post a Comment