Monday 31 October 2011

நீதான் கோலோச்சுகிறாய்


வாழ்வின் விளிம்பில்
நின்று கொண்டு
என்னையே நான்
தேடிக்கொண்டிருந்த நேரமது
என்னை எனக்கே
தேடித் தந்த
அந்த பலரில்
நீயும் ஒருத்தி
அதோடு நின்றுவிடவில்லை...

உள்ளே தள்ளிவிட்டனர்
வரமா சாபமா
தெரியவில்லை
ஆனால்
மீண்டும் வாழ்கிறேன்
நீயும் அங்கு இருப்பதனால்...

நீ யார் எனக்கு
என நீயும்
நான் யார் உனக்கு
என நானும்
கேட்டுக் கொண்டேயிருக்கின்றோம்
காதல் என்ற
கட்டத்துக்குள் கட்டுப்படுத்தி
அழகு பார்க்க விரும்பவில்லை –
அதுவும் இருக்கிறது...

நியதிகளுக்குள்
நியாயப் படுத்த முடியாமல் போனாலும்
எனக்கு நானே
எழுதிக் கொண்ட கோட்பாடுகளில்
நீதான் கோலோச்சுகிறாய்

என்னுள் உன்னையும்
உன்னுள் என்னையும்
தேடித் தேடியே
தொலைந்து போகின்றோம்
என்னில் நீயும்
உன்னில் நானும்
தெளிவு காண்கின்றோம்

உருவமில்லா உறவென்றாலும்
உறவு இருக்கிறது
அது நிலைக்கும்
நீயும் நானும்
நாமும்
இருக்கும்வரை

2 comments:

Nellayappan B said...

நியதிகளுக்குள் நியாயப் படுத்த முடியாமல் தவித்தாலும்
உங்களை உங்களுக்கு தேடித் தந்த அந்த பலரையும் மறக்காதது பாராட்டத்தக்கது!
என்றும் மாறாத அன்புடனும் தெளிவுடனும் வாழ வாழ்த்துகிறேன்.

அ.முத்து பிரகாஷ் said...

நீயும் நானும் நாமும் மூன்றும் ஒரே தருணத்தில் தனித்திருக்க இயலாதா.. இதே காதலோடு..

Post a Comment