Tuesday 11 October 2011

ஆலமர விழுதுகளாய்


என் மனதில் விழுந்த
உன் ஒற்றை நினைவு
என் எல்லா அணுக்களிலும்
ஆழமாய் வேர்விட்டு
அழகாய் வளர்ந்து நிற்கிறது...

ஆலமர விழுதுகளாய்
உன் கைகள்
என்னை இழுத்து
இறுக்க அணைத்து
உன்னை பிளந்து
என்னை உனக்குள்
புதைத்து கொள்கிறது...

ஆக்டோபஸ் கரங்களாய்
எட்டுதிக்கும் என்னை சூழ்ந்த
உன் நினைவுகள்
என்னை வாரி சுருட்டி
தன்னுள் விழுங்குகிறது...

எனது
அத்தனை எண்ணக் கிளைகளிலும்
ஏதோ ஒரு நுனியில்
வெவ்வேறு வண்ணத்தில்
வண்ணத்துப் பூச்சிகள்
படபடத்துக் கொண்டிருக்கின்றன
உனது நினைவாக...

தேங்கி நிற்கும் நீரில்
நான் எட்டி பார்க்கையில்
உன் முகம் மட்டுமே தெரிவதில்
விந்தையேதுமில்லை...
ஓடுகின்ற நீரில்
உனது புன்னகை ஓவியம
ஆச்சர்யம்....

1 comment:

Post a Comment