நீ
இருக்கும்
தருணங்களில்
சந்தோஷங்கள்
தானாக
வந்து ஒட்டிக்கொள்கின்றன
துன்பங்கள்
யாவும்
தள்ளி
நின்று பார்க்கின்றன...
ஆரம்பத்தில்
என்னை
உன்னிடம்
இழுத்து
வந்த மோகத்தையும் தாண்டி
இந்த நேசம்
ஆழமாய்
வளர்ந்து
என்னையும்
உன்னையும்
இறுக்கிப்
போட்டுள்ளது...
என் துன்பங்களையும்
இனிக்க
வைக்க
உன்னால்
மட்டுமே முடிகிறது
உன்
அருகாமையால்...
என்
மௌனங்களை
உன்னால்
மட்டுமே
மொழிபெயர்ப்பு
செய்ய முடிகிறது...
உன்னுடைய
தோளில் மட்டுமே
எவ்வித
சலனமுமின்றி
அனுமதி
கேட்கும் தயக்கமின்றி
சாய்ந்து
கொள்ள முடிகிறது
என் தாயின்
மடிபோல...
வெய்யிலின்
கொடுமையிலும்
சிலுசிலுவென
தீண்டிவிட்டு
போகிறது
உன்
நினைவுகள்
நீ மட்டும்
என்னுடனேயே
இருந்துவிட்டால்...
என் அறை
முழுதும்
உன்னாலே
நிரப்பி வைத்திருக்கிறேன்
என்
சுவாசமெல்லாம்
நீயாகவே
இருக்கிறாய்...
என்னை
கொஞ்ச
நீ
சேயாகிறாய்
நானும் உன்
மழலையாகிறேன்...
யார் நீ
என்ற
கேள்வி
அதன் பதிலை
தேடிக்கொண்டிருக்க
நான் இங்கே
பத்திரமாய்
உன்னுடன்
நீயாக...
No comments:
Post a Comment