Thursday 22 March 2012

காற்றுச் சுவர்


எனக்கு நன்றாய் தெரிகிறது -
தள்ளி உட்கார்ந்து இருக்கும்
என்னை
நீ
திரும்பி திரும்பி பார்ப்பது...

நீ பேசும் வார்த்தைகளின்
மிச்சங்கள் கேட்கும் தூரத்தில்
எனக்கு எப்போதும் பிடித்த
உன் வாசத்தை சுவாசித்துக்கொண்டேதான்
நான் அமர்ந்திருக்கின்றேன்...

உன்னை திரும்பிப் பார்க்கும்
ஆசையை
மனதில் பாரமாகவும்
கண்களில் கண்ணீராகவும்
மறைத்துக்கொண்டு
தைரியம் இல்லாமல்
தலை கவிழ்ந்து...

அலட்சியம்
உன் செயலில் தெரிந்தாலும்
ஒளிந்துகொள்ளும் அவசரம்
உன் கண்களில் தெரிகிறது
அந்த படபடப்பில்
உன் எண்ணங்களை
நான் படித்துக் கொள்கின்றேன்...

நீயா நானா
என போட்டியில்
நீயாக எழுப்பிக் கொண்ட
காற்றுச் சுவரை
ஏனோ கையால் விலக்கிவிட
மனமில்லாமல் நீயும்
உன் மனம் நோகுமோ என நானும்...

No comments:

Post a Comment