Wednesday 7 March 2012

எழுந்திருக்கவே மனமில்லாமல்


எத்தனைதான் அடைத்தாலும்
காலத்தின் கதவிடுக்கில் புகுந்து
உன் நினைவுகள்
என்னோடே வந்து
ஒட்டிக் கொள்கின்றன...

விடியல்
இருட்டை விலக்கும் வேளையில்
மிச்சமிருக்கும் முத்தங்களை
உன் இதழ்களில் தேடி
குடித்துக் கொண்டிருக்கிறேன்...

உன் வளைவுகள் படுக்கையில்
விட்டுச் சென்ற கோடுகளை
விரலால் வருடுகிறேன்...

போர்வைக்குள்
பிடித்து வைத்த
உன் வாசத்தில் மயங்கி
எழுந்திருக்கவே மனமில்லாமல்
மயங்குகிறேன்...

நெருக்கத்தின் வேகத்தில்
கழண்டுகொண்ட உன் முடிகள்
என்னை கட்டிக்கொண்டு
இம்சிக்கின்றன...

மூர்ச்சையான நேரத்தின்
வேர்வை ஈரத்தில்
என்
தாகம் தீர்த்துக்கொள்கின்றேன்...

இன்றும் வரும்
அந்த இரவுக்காக
இப்போதிருந்தே காத்திருக்கிறேன்
கதவுகளையெல்லாம்
கழட்டி வைத்துவிட்டு...

1 comment:

arasan said...

ஆஹா உணர்ந்து எழுதி இருக்கீங்க ..
வரிகள் அனைத்தும் செம அருமை /....
கதவை இன்னும் கொஞ்ச நேரத்தில் உடைக்க போறீங்க என்று சொல்லுங்க ..

Post a Comment