Tuesday 31 January 2012

எனது கீச்சுகள் - 3

என் கண்ணாடியில் உன் பிம்பங்கள் மட்டுமே தெரிகிறது..
 
ஆசையால் விட்டுப்போன வெட்கம்கூட கூசும் உன் பார்வையாலே வந்து ஒட்டிக் கொள்கிறது...
 
விரல் நுனிகள் முத்தமிட்டுக் கொள்ளும்போதல்லாம் உதடுகள் ஏனோ துடிக்கின்றன... 
 
நீ கொடுத்த முத்தங்களின் மிச்சங்கள் என்னை இம்சித்துக்கொண்டிருக்கின்றன...

என் இதயம் முழுதும் இறைந்து கிடக்கின்றாய்... எடுத்து கோர்க்கின்றேன் முழுதாய் சூடிக்கொள்ள...

மனம் ஏங்குகிறது உன் நேசம் சொல்லும் பார்வைக்காக...

சண்டை போட தயாராய் காரணங்களுடன் நீயும்... சமாதானம் செய்ய முத்தங்களுடன் நானும்...

சுகமாய் காற்றும் இதமாய் தலையணையும் தூக்கம் கொண்டுவரட்டும்... காலைமுதல் நடந்த கால்கள் இளைப்பாறட்டும்...
 
தூங்கித் திரியும் என் நெஞ்சம் உன்னை கேட்டதும் விழித்துக் கொள்கிறது...
 
போன வருடம் வாங்கிக் கொடுத்த அந்த ஒற்றை ரோஜா இன்னும் உன் கைப்பையில் இருக்கும்... எடுத்துப் பார் என் காதல் சொல்லும் #Feb14
 

3 comments:

Admin said...

கீச்சுகள் அனைத்தும் அருமை தோழர்..வாழ்த்துகள்..

Marc said...

அருமையான பதிவு வாழ்த்துகள்

vimalanperali said...

நல்ல கற்பனை.வாழ்த்துக்கள்.தினங்களை கொண்டாடுவதை விடுத்து தினங்களுக்கு உரியவர்களை கொண்டாடப்பழக வேண்டும்.

Post a Comment